குட்டி
"நல்ல இளம் நெஞ்சுக்கறியா குடு பாய்" என்றபடியே சலீம் பாயின் கறிக்கடைக்குள் வந்தார் சங்கர்.
"வாங்க வாத்தியார் சார்" என்று வரவேற்றான் சலீம்.
"என்ன சார் விசேஷம்" என்ற சலீமிடம், "பையனுக்கு உடம்பு சரியில்ல, அம்மா இளம் ஆட்டு நெஞ்சுக்கறிய ஆக்கி போட சொல்லுச்சி, அதான் வாங்க வந்தேன்" என்றார் சங்கர்.
"இதோ 10 நிமிஷம் உக்காருங்க சார், உடனே வரேன்" என்று, பக்கத்தில் தாய் ஆட்டிடம் பால் குடித்து கொண்டிருந்த குட்டி ஆட்டை அறுப்பதற்காக, அப்படியே இரண்டு கையாலேயும் வலுக்கட்டாயமாக தூக்கினான் சலீம்.
கூடவே கட்டப்பட்டிருந்த அந்த தாய் ஆடு, தன் குட்டி எடுத்து செல்லப்படுவதை பார்த்து, கதற ஆரம்பித்தது.
உடனே குட்டி ஆடும், தன்னால் முடிந்தவரை கத்தியது
அதன் "மே.. மே.." என்ற அலறல் சத்தம், சங்கரை ஏதோ செய்ய,
"சலீம், நில்லுப்பா, எனக்கு கறி வேண்டாம்" என்று சொல்லி, விருட்டென்று எழுந்து வீட்டை நோக்கி நடந்தார் சங்கர்.


0 Comments:
Post a Comment
<< Home