விசனம்
"சரிம்மா.. ஏன் அழுகற, ஒன்னும் இல்ல, கண்ண தொடச்சிக்கோ" என்று சித்ரா விடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் பாலாஜி.
"என்ன இப்படி தனியா விட்டு போய்ட்டீங்களே.. இந்த சின்ன கொழந்தையை வெச்சிக்கிட்டு தனியா நான் என்ன பண்ணுவேன்.." என்று கதறிக்கொண்டிருந்தாள் சித்ரா.
தன்னால் எவ்வளவோ முயன்றும் சித்ராவை சமாதானப்படுத்தமுடியாததை நினைத்து நொந்துகொண்டான்.
"விடுப்பா.. விடு.." என்று அருகில் இருந்தவர்கள் பாலாஜிக்கு ஆறுதல் சொன்னார்கள்.
நாம் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்காதே என்று விசனப்பட்டான்.
என்ன செய்வது, காலையிலேயே சற்று கவனமாக சாலையை கடந்து இருந்தால் இப்படி ஆவியாக நின்று கொண்டு தன் மனைவி கதறுவதை பார்த்து வருத்தப்படுக்கொண்டிருக்க வேண்டியதில்லை.


0 Comments:
Post a Comment
<< Home