சிகரம் பேசுகிறது: உரிமை

சிகரம் பேசுகிறது

பகிர்ந்துக்கொள்ளாத உணர்வு, ஒளியில்லாத கலங்கரை விளக்கத்துக்கு இணை

Tuesday, November 21, 2006

உரிமை

ஏ தமிழா, உனக்கெப்படி உண்ணத்தோணுகிறது?
உன் கண் முன்னே மாபெரும் உரிமைப்போர் நடக்கிறதே,
உனக்கு யுத்த சத்தம் கேட்கவில்லையா?

சற்று சிந்தித்துப்பார்..
40 மைல்களுக்கு அப்பால் உன் இனம் உண்ண உணவேதும் இல்லாமல் தன் உரிமைக்காக ஆயுதமேந்தி யுத்தகளத்தில் !
நீயோ இங்கு குடிபோதையில் உல்லாசமாக தேர்தல்களத்தில் !

பிணம் தின்னும் கழுகுகள் கூட மிகவும் உயர்ந்தவை;
உன் பாடு இன்னும் மோசம்;
அவைகள் கூட இறந்த உடலைத்தான் உண்ணுகின்றன
ஆனால் நீ,
ஆயிரக்கணக்கான உயிர்கள் கண் முன்னே
பிணமாவதை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறாய்

அவர்கள் உன் மக்கள் என்று உனக்கு விளங்குவதற்குள்
அங்கு வெறும் எலும்புத்துண்டுகள் மட்டுமே மிஞ்சும்

விழித்தெழு, நேர்கொண்டு செல், உன்னால் முடியும்
ஒரு ராணுவத்தை எதிர்கொண்டு ஒரு தமிழன் போராடுகிறானெண்றால்,
உன்னாலும் அவனுக்கு துணை நிற்க முடியும்
ஏனென்றால் நீயும் தமிழனே !!!

ஈழத்தில் அமைதி தவழட்டும்;
மீண்டும் குறிஞ்சி மலரட்டும்;
யாழ்பானத்தில், யாழிசை ஒலிக்கட்டும்;

0 Comments:

Post a Comment

<< Home