இயோ புத்தாண்டு
மீண்டும் ஓர் புத்தாண்டு.
வருடா வருடம் வருகிறாய்.
இப்போதெல்லாம் நீ வந்தாலே திகிலடைகிறோம்
ஏனென்கிறாயா?....
ஒவ்வொரு வருடமும் நீ அள்ளித்திண்ணும் மனித உயிர்களின் எண்ணிக்கை தான் காரணம்
உனக்கேன் இவ்வளவு பசி?
நாங்கள் தான் உனக்கு நிறைய நர விருந்தளிக்கிறோமே..
தினந்தினம் நூறு உயிர்களையாவது போரிட்டு கொல்கிறோம்...
இருந்தும்,
உன் பசி தான் தீருவதில்லை
அப்பாவி உயிர்களின் நர மாமிசம் உனக்கு பிடித்துவிட்டது
இந்த வருடம் என்ன வைத்திருக்கிறாய்?
என்றாலும் உனக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்
தமிழ் அகராதிக்கு "சுனாமி" என்னும் வார்த்தையை சேர்த்திருக்கிறாய்
அதற்கு நீ கேட்ட கூலி, முப்பதாயிரம் உயிர்கள் !!
இயற்கையே, எங்களை வாழ விடு.
சத்தியமாக சொல்கிறோம். நாங்கள் இறக்கவே பிறந்தோம்..
இயற்கையாக.......
மரணத்தை நாங்கள் தழுவவே போகிறோம்,
எங்களை சில காலம் விழுங்காமல் இரு..
வருக புத்தாண்டே, வாழ விடு.


0 Comments:
Post a Comment
<< Home